சென்னை:
ஜெயின் சமூகத்தினரால் தயாரிக்கப்படும் உணவுப்பொருட்கள் என்றும், முஸ்லீம் பணியாளர்கள் இல்லை என்றும் விளம்பரம் செய்த பேக்கரி கடையின் உரிமையாளரை போலீசார் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை, தி.நகர், மகாலட்சுமி தெருவில் வசிக்கும் பிரசாந்த் அதே முகவரியில் Jain Bakeries & Confectioneries என்ற பெயரில் பேக்கரி நடத்தி வருகிறார்.

இவர் ஆன்லைனில் பேக்கரி உணவுப் பொருட்களை விற்பனை செய்து வருகிறார். இந்த நிலையில், பிரசாந்த் அவருடைய வாட்சப் குரூப்பில் பேக்கரி குறித்து விளம்பரம் செய்தபோது, அதில் ‘‘Made By Jains On Orders, No Muslim Staffs’’ என்று குறிப்பிட்டிருந்தார். இந்த விளம்பரத்தில் இஸ்லாமியர்களைப் பற்றி தவறாக குறிப்பிட்டு இருந்ததாக சர்ச்சை எழுந்தது.

இந்த விளம்பரம் சமூக வலைதளங்களில் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.