கோவா: ஐஎஸ்எல் கால்பந்து தொடரில், தனது முதல் லீக் போட்டியில் ஆடிய சென்னை அணி, கோவாவிடம் 0-3 என்ற பெரிய தோல்வியை சந்தித்தது.

ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் ஆறாவது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் இப்போது லீக் சுற்றுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. கோவாவில் நடைபெற்ற போட்டியில், சென்னை மற்றும் கோவா அணிகள் சந்தித்தன.

இப்போட்டியில் தொடக்கம் முதலே கோவா அணி ஆதிக்கம் செலுத்தியது. ஆட்டத்தின் 30வது நிமிடத்தில் கோவா அணி ஒரு கோல் அடிக்க, முதல் பாதி ஆட்டத்தில் கோவா அணி முன்னிலைப் பெற்றது.

இரண்டாவது பாதி ஆட்டத்தில் 62வது மற்றும் 81வது நிமிடங்களில் கோவா அணி மேலும் 2 கோல்களைப் போட்டு மிகவும் வலுவான முன்னிலைப் பெற்றது.

ஆனால், சென்னை அணியின் கோல் முயற்சிகள் கடைசிவரை வெற்றிபெறவில்லை. கோவா அணியின் கோல்கீப்பர் சிறப்பாக செயல்பட்டு சென்னை அணிக்கு தொடர்ந்து ஏமாற்றத்தை அளித்தார்.

எனவே, இறுதியில் 0-3 என்ற கோல்கள் வித்தியாசத்தில் சென்னை அணி தோல்வியை சந்தித்தது.