துபாய்: ஐபிஎல் தொடரில், இன்றைய போட்டியில் சென்னை – டெல்லி அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற சென்னை அணி, இன்னும் பந்துவீச்ச‍ையே தேர்வுசெய்துள்ளது.

சென்னை அணியில், இந்தப் போட்டியில் அம்பாதி ராயுடு இடம்பெறவில்லை. கிட்டத்தட்ட ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக இருந்த அணியே இன்றும் உள்ளது.

கடந்த போட்டி குறித்து சென்னை அணி கேப்டன் தோனி மீது பலரும் விமர்சனங்களை முன்வைத்தனர். வெற்றிக்காக ஆடாமல், வெறும் ரன் ரேட்டுக்காக ஆடியதாக அவர் மீது விமர்சனங்கள் எழுந்தன. மேலும், அவரின் உடல்தகுதி குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது.

இந்நிலையில், இன்றையப் போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாய நெருக்கடி சென்னை அணிக்கு ஏற்பட்டுள்ளது. பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில், சூப்பர் ஓவரில் வென்ற டெல்லி அணி, வெற்றியை தக்கவைக்க போராடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.