சென்னை: 

சென்னையில் தண்ணீர் தட்டுப்பாடுக்கு அரசியல்வாதிகளும், மக்களும்தான் காரணம் என்று புதுச்சேரி கவர்னர் விமர்சித்து இருந்தார்.

இதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்ததோடு, கிரண்பேடி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார்.

இந்த நிலையில், சென்னை தண்ணீர் தட்டுப்பாடு குறித்து தெரிவித்த கருத்து தனது கருத்து அல்ல என்றும், மக்கள் கருத்தையே நான் பதிவு செய்திருந்தேன் என்று  பதில் தெரிவித்து உள்ளார்.