சென்னை: சென்னையில் 10 ரூபாய் டாக்டர் மோகன் ரெட்டி கொரோனாவால் மீண்டாலும் திடீரென காலமானார்.
சென்னையில் ஏழை மக்களிடம் வெறும் 10 ரூபாய் மட்டுமே பெற்று வைத்தியம் பார்த்தவர் டாக்டர் மோகன் ரெட்டி. கொரோனா தொற்றுநோய் காலத்திலும் அயராது மக்களுக்கு சேவையாற்றினார்.
கடந்த 25ம் தேதி கொரோனாவால் பாதிக்கப்பட்ட அவர் தனியார் மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்டார். தீவிர சிகிச்சையின் பலனாக கொரோனாவில் இருந்து மீண்டார். ஆனால் எதிர்பாராத விதமாக சுவாசக் கோளாறு காரணமாக உயிரிழந்தார்.
இத்தகவலை அவரது சகோதரரும், மருத்துவருமான எம்.கே. ரெட்டி தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று காலத்தில் எங்களுடன் வீட்டுக்கு வந்து தங்க சொன்னோம். நான் வந்துவிட்டால் என்னை தேடி வரும் நோயாளிகளை யார் பார்த்து கொள்வது என்றார்.
டாக்டர் மோகன் ரெட்டியின் மரணம், வில்லிவாக்கம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. 1936ம் ஆண்டு நெல்லூரில் பிறந்த டாக்டர் ரெட்டி, ஆரம்பக் கல்வியை குடூரில் பயின்றார்.
பின்னர் கில்பாக் மருத்துவக் கல்லூரியில் பட்டம் பெற்றார். அதன் பிறகு மருத்துவராக ஆனார். ரயில்வேயில் பணியாற்றிய பின்னர், வில்லிவாக்கத்தில் மோகன் நர்சிங் ஹோம் என்ற மருத்துவமனை ஒன்றை தொடங்கினார்.
டாக்டர் மோகன் ரெட்டி நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதோடு நின்று விடவில்லை. மேலும் அவர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஏழை மக்களுக்கு உணவும் விநியோகித்தார். அவரது பரோபகார சேவைகளுக்காக, டாக்டர் ரெட்டியை அப்போதைய தமிழக ஆளுநர் ரோசய்யா பாராட்டினார்.  கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள் மற்றும் அனாதை இல்லங்களுக்கும் டாக்டர் நன்கொடை அளித்தார்.