201611160453128863_isl-2016-chennaiyin-fc-back-in-reckoning-after-20-win-over_secvpf
சென்னைக்கும்  புனேக்கும்  நடந்த கால் பந்தாட்ட லீக்  போட்டியில் சென்னை அணி  வெற்றி பெற்றது.
இந்தியன்  சூப்பர்  லீக் (ஐ.எஸ்.எல்) கால் பந்தாட்ட போட்டியில்  8 அணிகள் இடம் பெற்று இந்தியாவின்  பல்வேறு நகரங்களில் விளையாடி வருகின்றது. நேற்று  சென்னையில் உள்ள  நேரு கால் பந்தாட்ட மைதானத்தில்  நடைபெற்ற  39-வது  லீக் போட்டியில்   2-0 என்ற புள்ளி கணக்கில் புனே  அணியை  தோற்கடித்து சென்னையின் எப்.சி  அணி வெற்றி  பெற்றது.
இதுவரை நடைபெற்ற போட்டியில் சென்னையின் எப்.சி   அணி  3 வெற்றிகள் பெற்று புள்ளி பட்டியலில் 5-வது  இடத்திற்கு முன்னேறி உள்ளது.
இன்று  இரவு 7 மணிக்கு எப்.சி.கோவா மற்றும் மும்பை சிட்டி எப்.சி. அணிகள் விளையாட உள்ளது.