டில்லி,

நாடு முழுவதும் வங்கி ஊழியர்களின் எதிர்ப்புகளை மீறி எஸ்பிஐ வங்கி அதன் துணை வங்கிகளை கடந்த மார்ச் மாதம் இணைத்து ஒரே வங்கியாக அறிவித்தது.

தற்போது அந்த 6 வங்கிகளின் காசோலைகள் இந்த மாதம் வரை மட்டுமே செல்லும் என்று அறிவித்து உள்ளது.

ஸடேட் பாங்க் ஆஃப் ஹைதராபாத், ஸ்டேட் பேங்க் ஆஃப் பிகானீர் அன்ட் ஜெய்ப்பூர், ஸ்டேட் பாங்க் ஆஃப் மைசூர், ஸ்டேட் பாங்க் ஆஃப் பாட்டியாலா, ஸ்டேட் பாங்க் ஆஃப் திருவாங்கூர் ஸ்டேட் பாங்க் ஆஃப் ராய்ப்பூர்  உள்பட 6 எஸ்பிஐ சார்பு வங்கிகளும் எஸ்பிஐ வங்கியுடன் கடந்த மார்ச் மாதத்துடன் இணைந்து ஒரே வங்கியானது.

 

இந்த 6 வங்கிகளின் காசோலைகள் செப்டம்பர் 30க்குப் பின் செல்லாது: எஸ்பிஐ அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியுடன் இணைக்கப்பட்ட  ஸ்டேட் பாங்க் ஆஃப் பாட்டியாலா, ஸ்டேட் பாங்க் ஆப் பிகானீர் மற்றும் ஸ்டேட் பாங்க் ஆஃப் ஜெய்ப்பூர், ஸ்டேட் பாங்க் ஆஃப் ராய்ப்பூர், ஸ்டேட் பாங்க் ஆஃப்  திருவாங்கூர், ஸ்டேட் பாங்க் ஆஃப் ஹைதராபாத் ஆகிய ஆறு வங்கிகளின் கிளைகளில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள்   இந்திய பினான்சியல் சிஸ்டம் (IFS) கோட் கொண்ட புதிய காசோலைப் புத்தகங்களைப் பெற்றுக் கொள்ளுமாறும் எஸ்பிஐ அறிவுறுத்தியுள்ளது.

பாரதிய மகிளா வங்கியில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களின் காசோலைகளும் செப்டம்பர் 30ம் தேதிக்குப் பிறகு செல்லாது என்பதால் அதனை பயன்படுத்த வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளது.