போபால்:

த்திஸ்கர் மாநிலத்தில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வாக்குப்பதிவு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை (இவிஎம்) தேவையில்லை என்றும், வாக்குச்சீட்டுகளைக் கொண்டே தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் என்று மாநில முதல் பூபேஷ் பாகேல் அறிவித்து உள்ளார்.

வாக்குச்சீட்டு முறை தேர்தலுக்கு கடந்த சில ஆண்டுகளாக முடிவு கட்டிய தேர்தல் ஆணையம், எலக்ட்ரானிக் வோட்டிங் இயந்திரம் மூலம் வாக்குப்பதிவை செயல்படுத்தி வருகிறது. இவிஎம் இயந்திரத்தில் தில்லுமுல்லு நடைபெறுவதாக காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.

இந்த நிலையில், சத்திஸ்கர் மாநிலத்தில் நடைபெற உள்ள  உள்ளாட்சி மன்றத் தேர்தல்களில் வாக்குச் சீட்டுக்கு ஆதரவாக ஈ.வி.எம்-களை அகற்றி விட்டு, மீண்டும் பழைய முறையான வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடத்த மாநில அரச முடிவு செய்துள்ளது.

இதன் காரணமாக மீண்டும் வாக்குச்சீட்டு முறை தேர்தல் நடத்தும் முதல் மாநிலமாக சத்தீஸ்கர் மாறி உள்ளது.

சத்திஸ்கர் மாநிலத்தில் ஏற்கனவே உள்ளாட்சி தேர்தல் தொடர்பான தேர்தல் விதிகள் ஆய்வு தொடர்பாக அமைச்சரவைக் குழு அமைக்கப் பட்டிருந்த நிலையில், இன்று முதல்வர் பூபேஷ் பாகல் தலைமையில், அமைச்சரவை குழு ஆலோசனை நடைபெற்றது. இதில் உள்ளாட்சித் தேர்தல்களில் ஈ.வி.எம்-களுக்குப் பதிலாக வாக்குச் சீட்டைப் பயன்படுத்த பரிந்துரைத்தது.

இன்றைய ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட பரிந்துரைகள் சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகேல் தலைமையிலான மாநில அமைச்சரவை ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து கூறிய மாநில அமைச்சர்,  நகர்ப்புற உள்ளாட்சி மன்றத் தேர்தல்களில் வாக்குச் சீட்டைப் பயன்படுத்து வதற்கும், மேயர் மற்றும் தலைவர் பதவிகளுக்கும் மறைமுக தேர்தல்களை நடத்துவதற்கும் நகராட்சித் தேர்தல் சட்டத்தைத் திருத்தும் வகையில் திருத்தம் செய்ய சத்தீஸ்கர் அமைச்சரவை ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளது.

நடைபெற உள்ள  உள்ளாட்சி அமைப்பு தேர்தல்களில் வாக்குச் சீட்டைப் பயன்படுத்துவதை சம்பந்தப்பட்ட சட்டம் தடை செய்யாது என்றும் தெரிவித்து உள்ளார்.

கடந்த ஆண்டு (2018)  சத்திஸ்கரில்  நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் 15 வருட இடைவெளிக்குப் பிறகு காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளது. இந்த நிலையில், இவிஎம் இயந்திரத்துக்கு பதிலாக மீண்டும்  வாக்குச்சீட்டு தேர்தல் முறையை கொண்டு முயற்சி எடுத்துள்ளது.

இதுகுறித்து கூறிய  சத்தீஸ்கர் மாநில பாஜக செய்தித் தொடர்பாளர் சஞ்சய் ஸ்ரீவாஸ்தவ், வாக்குச் சீட்டைப் பயன்படுத்துவதை எதிர்த்துடன்,  இது “காங்கிரசின்  சதி” என்று விவரித்தார்.

ஆனால், இதுகுறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சைலேஷ் திரிவேதி,  “சத்தீஸ்கரில்  இவிஎம் இயந்திரம் குறித்த சர்ச்சைகள் ஏற்கனவே வெடித்துள்ள நிலையில், அங்குள்ள வாக்காளர்கள்   உள்ளாட்சி அமைப்பு தேர்தல்களில் வாக்குச் சீட்டைப் பயன்படுத்துவதற்கான முடிவை வரவேற்றுள்ளனர் என்று கூறினார்.