ரெய்ப்பூர்:

பல்வேறு திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட ரூ.450 கோடி நிதியை இலவச காஸ் சிலிண்டர்களுக்கு சத்தீஸ்கர் மாநில முந்தைய பாஜக அரசு திருப்பி விட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


வறுமைக் கோட்டுக்கு கீழே வாழ்பவர்களுக்கு ரூ.55 கோடியில் இலவச காஸ் சிலிண்டர் வழங்கும் திட்டத்தை சத்தீஸ்கர் மாநில முன்னாள் முதல்வர் ராமன் சிங் தொடங்கினார்.

ஆனால், பல்வேறு திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை,பிரதமர் மோடியின் உத்தரவின் பேரில், இலவச காஸ் சிலிண்டர் திட்டத்துக்கு ராமன் சிங் திருப்பி விட்டுள்ளார்.

இதன்மூலம் மற்ற திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட ரூ.450 கோடி நிதி திருப்பிவிடப்பட்டுள்ளது. மேலும், அடுக்குமாடி பார்க்கிங் மற்றும் நகரில் கூடங்கள் அமைக்கவும் மற்ற துறைகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதி பயன்படுத்தப்பட்டுள்ளது என ஆளும் காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.