த்திஸ்கர் மாநிலத்தில், மதுக்கடைகள் ஊரடங்கு தளர்வு காரணமாக நேற்று திறக்கப்பட்ட நிலையில், மக்கள் கூட்டம் அலைமோதியது. இதை  தடுக்க ஆன்லைன் முன்பதிவு செய்து, குறிப்பிட்ட நேரத்தில் சென்று மது பாட்டில்களை வாங்கிச்செல்லுமாறு மாநில அரசு உத்தரவிட்டு உள்ளது. அதே வேளையில் ஹோம் டெலிவரி செய்ய வேண்டுமென்றால் அதற்கு தனிக்கட்டணம் செலுத்த வேண்டும்.

நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவலை தடுக்க அமல்படுத்தப்பட்டுள்ள ஊரட்ங்கு மே 17ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், பல தளவுகளும் அறிவிக்கப்பட்டு உள்ளன. அதன்படி நேற்று முதல் பல மாநிலங்களில் மதுக்கடைகள் திறக்கப்பட்டு உள்ளன.
40நாட்களுக்கு பிறகு மதுக்கடைகள்  திறக்கப்பட்டால், மது பாட்டில்கள் வாங்க மக்கள் கூட்டம் அலை மோதியது.  மதுப்பிரியர்கள் சமூக விலகலை கடைபிடிக்காமல் கலைகளில் அலைமோதியது கடுமையான விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில், சத்தீஸ்கர் அரசு  மாநில ‘குடி’ மகன்களின் வசதிக்காக  புதிய முறையை அமல்படுத்தி உள்ளது. இதற்காக மாநில அரசின்  வாணிப கழகம் ஆன்லைன் வெப் போர்டல் எனப்படும் வலைதளத்தை துவக்கியுள்ளது.
இந்த வலைதளத்தில் தங்களது ஆதார் எண்ணை வைத்து பதிவு செய்தால் வரும் OTP  ஒருமுறை கடவுச்சொல்  மூலம் இணையதளத்திற்குள் சென்று தேவையான மதுபானங்களை ஆடர் செய்தால் உடன் வீட்டிற்கே நேரில் சென்று விநியோகிக்கும் முறையை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு விநியோகிப்பதற்கு சேவை கட்டணமாக ரூ. 120 வசூலிக்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த இந்த புதிய முயற்சியை அறிமுகம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.