டெல்லி:

டெல்லி மாநில சட்டமன்ற தேர்தல் தேதியை இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்தார். அன்படி, பிப்ரவரி 8ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.

70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி சட்டமன்றத்தின் தற்போதைய பதவிக்காலம் வரும் பிப்ரவரி மாதம் 22-ந்தேதியுடன் நிறைவு பெறுகிறது. அதற்கு முன்னதாக தேர்தல் நடைபெற்று புதிய ஆட்சி ஏற்படுத்தப்பட வேண்டும்.  இந்த நிலையில்டெல்லி மாநில சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. டெல்லிக்கு ஒரே கட்டமாக பிப்ரவரி 8 தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதன்படி,

வேட்புமனுத் தாக்கல் தொடங்கும் தேதி: ஜன 14
 
வேட்புமனு முடிவடையும் நாள் : ஜன. 21
 
வேட்புமனு பரிசீலனை : ஜன. 22
 
வேட்புமனு திரும்பப் பெற கடைசிநாள் : ஜன. 24
 
வாக்குப்பதிவு : பிப்ரவரி 8
 
வாக்கு எண்ணிக்கை : பிப்ரவரி 11

தேர்தல் தேதியை வெளியிட்டு பேசிய தேர்தல்ஆணையர் சுனில்அரோரா, டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பாக நான்கு கட்டங்களாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாகவும், ஜனவரி 1ந்தேதி நிலவரப்படி, டெல்லியில் ஒரு கோடியே 46 லட்சத்து 92 ஆயிரத்து 136 (1,46,92,136) வாக்காளர்கள் உள்ளனர் என்று கூறினார்.

தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனே அமலுக்கு வருவதாக தெரிவித்தவர்,  வாக்குப்பதிவுக்கு  13,750 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்படும் என்றும் கூறினார்.