சென்னை: வீரமரணம் அடைந்த மதியழகன் குடுப்பத்திற்கு ரூ.20 லட்சம் நிவாரணம் வழங்கப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தின் சந்தெர்பானி எல்லைப்பகுதியில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளது.

இந்திய தரப்பில் தக்க பதிலடி கொடுக்க இந்த துப்பாக்கிச்சூட்டில் ராணுவ வீரர் மதியழகன் படுகாயம் அடைந்தார். அவர் ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

மதியழகன் சேலம் மாவட்டம் எடப்பாடி தாலுகாவில் உள்ள ஸ்ரீரங்காய் காடு என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ஆவார். மதியழகன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள ராணுவ செய்தித்தொடர்பாளர், பணியில் வீர மரணம் அடைந்த மதியழகனின் உயிர்தியாகத்தை நாடு மறக்காது என்று கூறியுள்ளார்.

இந் நிலையில், வீரமரணம் அடைந்த மதியழகன் குடுப்பத்திற்கு ரூ.20 லட்சம் நிவாரணம் வழங்கப்படுவதாக அறிவித்துள்ளார்.