சென்னை: ஆளுநருடனான முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் சந்திப்பு திடீர் என ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் தற்போது கொரோனா பரவல்து கட்டுக்குள் வந்துள்ளது. இந் நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை இன்று மாலை 5 மணிக்கு சந்திக்க உள்ளதாக கூறப்பட்டது.

சந்திப்பின் போது  கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆளுநரிடம் முதலமைச்சர் விளக்குவார் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இந் நிலையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உடனான முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் சந்திப்பு திடீரென ரத்து செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சந்திப்பு ரத்துக்கான காரணங்கள் என்னவென்று தெரியவில்லை. கொரோனா தடுப்பு பணிகள் குறித்து விளக்க ஆளுநரை சந்திக்க திட்டமிட்டிருந்த நிலையில் சந்திப்பு திடீர் ரத்து செய்யப்பட்டுள்ளது.