சென்னை: மத்திய ஜல் சக்தி அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத் கொரோனாவில் இருந்து விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளார்.

மத்திய ஜல் சக்தி அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத்துக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. சிகிச்சைக்காக அவர் குர்கான் மேதாந்தா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளார். இந்த விவரத்தை அவர் தமது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக கூறி உள்ளார்.

கடந்த சில நாட்களில் தம்முடன் தொடர்பில் இருந்த அனைவரும் தங்களை தனிமைப்படுத்தி கொண்டு சோதனை செய்து கொள்ளுமாறும் அவர் தமது டுவிட்டரில்  கேட்டுக்கொண்டுள்ளார்.

இந் நிலையில், அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத் கொரோனாவில் இருந்து விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளார். இது குறித்து அவர் தமது டுவிட்டர் பக்கத்தில் கூறி உள்ளதாவது:

மாண்புமிகு மத்திய அமைச்சர் ஜல் சக்திக்கு விரைவில் மீட்க விரும்புகிறேன். கோவிட்_19 நோய்த்தொற்று சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர் விரைவில் குணமடைந்து மக்கள் சேவையைத் தொடர எனது பிரார்த்தனைகள் எப்போதும் அவருடன் இருக்கும் என்று குறிப்பிட்டு உள்ளார்.