சென்னை:

ந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதை தடுக்கும் வகையில் தமிழகஅரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது.

நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழக அரசும் பால், காய்கறி, உணவுப் பொருட்கள், மருத்துவம், தண்ணீர், ஊடகம் தவிர மற்ற முக்கியமில்லாத விஷயங்களுக்கு வீட்டை விட்டு வெளியே வரக் கூடாது என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த நிலையில், மாவட்டங்களில் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் என்னென்ன என்பது குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி காணொளி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.  ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள நிலவரம் குறித்தும் பாதுகாப்பு நடவடிக்கைள் குறித்தும் கேட்டறிந்து வருகிறார்.

இந்தக் கூட்டத்தில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர், வருவாய் பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், தலைமைச் செயலாளர் க.சண்முகம் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உட்பட அனைவரும் முக கவசம் அணிந்திருந்தது குறிப்பிடத்தக்கது.