சென்னை:
முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்று வந்த மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகளின் 3 நாள் மாநாடு இன்றுடன் நிறைவு பெற்றது.

கடந்த 5ந்தேதி முதல் நடைபெற்று வந்த  3 நாள் மாநாடு இன்று முடிவடைந்தது. முதல்நாள்  மாநாட்டில் மாவட்ட ஆட்சித்தலைவர்கள், காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இரண்டாவது நாள் மாநாட்டில் மாவட்ட ஆட்சித்தலைவர்கள் மட்டும் கலந்து கொண்டனர். இதையடுத்து இன்று நடைபெற்ற 3வது நாள் மாநாட்டில் காவல்துறை அதிகாரிகள் மட்டும் கலந்துகொண்டனர்.

இன்றைய காவல்துறை அதிகாரிகளின் மாநாட்டில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, காவல் துறையினருக்கு பல்வேறு அறிவிப்புகள், ஆலோசனைகளை கூறி உள்ளார்.

அப்போது, இதுவரை சிசிடிவி கேமராக்கள் இல்லாத காவல் நிலையங்களில் விரைவில் சிசிடிவி காமிரா பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், காவலர்களுக்கு வீடுகள் கட்டித்தரப்படும் என்றும், பொதுமக்களின் புகார்களை அலட்சியப்படுத்தக்கூடாது போன்ற பல அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.