சென்னை:

மிழகத்தில் கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ள நிலையில், முதல்வர் எடப்படி பழனிச்சமி இன்று தலைமைச் செயலகத்தில் மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். அதைத்தொடர்ந்து தமிழக அமைச்சரவை கூட்டமும் நடைபெற உள்ளது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம் உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்த உள்ளார்

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 45 ஆயிரத்தை நெருங்கி வரும் நிலையில் மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை 11 மணிக்கு ஆலோசனை நடத்த உள்ளார்.

இதையடுத்து, நண்பகல் 12 மணிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில், கொரோனா தடுப்பு நடவடிக்கை, ஊரடங்கு குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதைத்தொடர்ந்து  வரும் 17ஆம் தேதி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன்,  பிரதமர் மோடி  ஆலோசனை நடத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.