சென்னை: ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி தீபம் ஏற்றி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று  உறுதிமொழி எடுத்துக்கொண்டார்.

சென்னை பசுமைவழிச்சாலை இல்லத்தில் ஜெயலலிதா படத்திற்கு முன்பு தீபம் ஏற்றி குடும்ப உறுப்பினர்களுடன் அவர் உறுதிமொழி ஏற்றார். இதேபோன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் அதிமுகவினர் தீபம் ஏற்றினர்.

அதிமுகவைக் காப்போம் என்று அவர்கள் அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். ஜெயலலிதா வழியைப் பின்பற்றி சட்டசபை தேர்தலில் அதிமுகவிற்காக உழைக்கும் வகையில் அதிமுகவினர் அனைவரும் வீடுகளில் தீபம் ஏற்றி உறுதிமொழி எடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னதாக கூறியிருந்தார்.