சென்னை:
மிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழகஅரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்து உள்ளது. இந்தநிலையில், இன்று மாலை ஆளுநன் பன்வவாரிலால்புரோகித்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்து பேச இருப்பதாக கூறப்படுகிறது.

தமிழகம் உள்பட நாடு முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமல்படுத்தப் பட்டு உள்ளது. ஏற்கனவே முதல்கட்டமாக மார்ச் 24ந்தேதி முதல் ஏப்ரல் 14ந்தேதி 21 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆனால், கொரோனா பரவல் குறையாத நிலையில், 2வது கட்டமாக ஊரடங்கு  மே 3ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டது.  ஆனால், தற்போதும் தமிழகத்தில் சென்னை உள்பட  பல மாநிலங்களில் கொரோனாவின் தாக்கம் குறையாததால்,  ஊரடங்கு 3வது முறையாக மேலும் 2 வாரம் நீட்டிக்கப்பட்டு உள்ளது. அதேவேளையில் பல பணிகளுக்கு தளர்வுகளும் அறிவிக்கப்பட்டு உள்ளன.
தமிழகத்திலும் மே 17நேததி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் பல்வேறு பணிகளுக்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. ஆனால், தற்போதுதான் சென்னை உள்பட பல மாவட்டங் களில் கொரேனா பரவல் தீவிரமாகி வருகிறது. இந்த நிலையில், தமிழக முதல்வர் எடப்படி கே. பழனிசாமி. ளுநர் பன்வாரிலால் புரோஹித்தை இன்று மாலை ராஜ்பவனில்  சந்திக்க உள்ளார்
இன்று மாலை 5 மணியளவில்  இந்த சந்திப்பு நடைபெற உள்ளது. சந்திப்பின்போது,  கொகரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக ஆளுநருக்கு முதல்வர் விளக்குவார் என தெரிகிறது.