மிழக முதல்வர் ஜெயலலிதா குறித்து வதந்தி பரப்பியதாக மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
download-1
உடல்நலக்குறைவு காரணமாக தமிழக முதல்வர் ஜெயலலிதா சென்னை  அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த 22 தினங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் அவரது உடல் நலம் குறித்து வதந்தி பரவியது. இதையடுத்து 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் கோவை அதிமுக நிர்வாகி புனிதா என்பவர் கொடுத்த புகாரின் பேரில் கோவை தொண்டாமுத்தூர் பகுதியை சேர்ந்த ரமேஷ், சுரேஷ் என்ற இரண்டு வங்கி ஊழியர்கள் இன்று காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.