சென்னை:

கன்னியாகுமரிக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சென்று மீனவர்கள் கோரிக்கையை கேட்க வேண்டும் ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்

ஒகி புயலில் சிக்கி மாயமான மீனவர்களை மீட்க கோரி அவர்களது உறவினர்கள் குழித்துறை ரயில்வே ஸ்டேஷனில் ரயில் மறியல் பேராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அவர்களிடம் கலெக்டர் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். அவர்களின் கோரிக்கையை கேட்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேரில் சென்று சந்தித்து கேட் வேண்டும் என்று தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.