தூத்துக்குடி: தூத்துக்குடி விமான நிலையம் அருகே முதல்வர் பாதுகாப்பு வாகனம் மாட்டின் மீது விபத்துக்குள்ளானது.

தமிழகத்தில் சட்டசபை தேர்தலை முன்னிட்டு, அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் களம் இறங்கி உள்ளன. பிரச்சாரம் காரணமாக, தமிழக அரசியல் களம் சூடு பிடித்துள்ளது.

இந் நிலையில் தூத்துக்குடி மாவட்டத்திலிருந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேரன்மகாதேவி புறப்பட்டுச் சென்றார். அப்போது, அவரின் பாதுகாப்புக்காக சென்ற வாகனம் ஒன்று வல்லநாடு அருகே மாட்டின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.