சென்னை,
மிழக  தலைமை செயலாளர் வீட்டில் இன்று அதிகாலை முதலே வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அவரது மகன் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது.
தமிழகத்திற்கே தலைகுனிவை ஏற்படுத்தி இருக்கும் இந்த ரெய்டு குறித்து அதிகாரிகள் மட்டத்தில் பலவாறாக பேசப்பட்டு வருகிறது.

இன்று காலை தலைமை செயலகம் வந்த தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், தலைமை செயலாளர்  ராம் மோகன் ராவ் வீட்டில் நடைபெறும் ரெய்டு குறித்து, மூத்த அதிகாரிகளுடனும், அமைச்சர்களுடனும் ஆலோசனை நடத்தி வருகிறார்.
தலைமை செயலாளர் வீட்டில் ரெய்டு நடைபெறுவது தலைமை செயலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
 
Tamil Nadu CM convenes urgent meeting in the wake of IT raids being conducted at premises of Chief Secretary.