நெடுவாசல்,

நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன்  திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்று வருகிறது.

இன்றைய போராட்டத்தில் சிறுவர்கள் அரை நிர்வாணத்துடன் குட்டிகர்ணம் அடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டம் தொடங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது.

இதற்கு தமிழக அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மத்திய அரசின்  இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து புதுக்கோட்டை மாவட்டம்,  நெடுவாசல், நல்லாண்டார் கொல்லை மற்றும் வடகாட்டில் மத்திய மாநில அரசுகளை எதிர்த்து பொதுமக்கள் போராட்டத்தில் குதித்தனர்.

பின்னர் பொன்ராதாகிருஷ்ணன் உறுதிமொழியை ஏற்று போராட்டம் கைவிடப்பட்டது.

இந்நிலையில், தற்போது 2-வது கட்டமாக நடைபெற்று வரும் போராட்டத்தின் 10-வது நாளான நேற்று பெண்களும் சிறுவர்களும் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

இதனைதொடர்ந்து சிறுவர்கள் அரை நிர்வாணத்துடன் குட்டிகர்ணம் அடிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் 20க்கும் மேற்பட்ட சிறுவர்கள் கோஷம் போட்டபடியே குட்டி கர்ணம் அடித்து மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.