நாளை (ஜூன் 12) உலகம் முழுவதும் குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு நாள் (World Day Against Child Labour) கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி தமிழக முதல்வர் செய்தி வெளியிட்டு உள்ளார். அதில், ‘குழந்தைகளின் வருமானம் நாட்டிற்கு அவமானம்’  என்று குறிப்பிட்டு உள்ளார்.

உலகம் முழுவதும் ஆண்டுதோறும் ஜூன் 12 ஆம் தேதி உ குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகளின் ஓர் அங்கமான பன்னாட்டு தொழிலாளர் அமைப்பினால் (ஐ.எல்.ஓ) அங்கீகரிக்கப்பட்ட இந்த நாள் குழந்தைத் தொழிலாளர்கள்  பற்றிய  விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கடந்த  2002ம் ஆண்டு முதல் கடைபிடிக்கப்படுகிறது.

இதையொட்டி தமிடிநநாடு முதல்வர் .எடப்பாடி மு. பழனிசாமி வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது,

உலகெங்கும் குழந்தைத் தொழிலாளர் முறைக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்திடும்
வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12-ஆம் நாள் குழந்தைத் தொழிலாளர் முறை
எதிர்ப்பு தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

இப்பூமியில் பிறக்கும் குழந்தைகள் ஒவ்வொருவருக்கும் வாழும் உரிமை, பாதுகாப்பு உரிமை
மற்றும் கல்வி உரிமை மிக இன்றியமையாததாகும். அந்த உரிமைகளை அவர்களிடமிருந்து
பறிப்பது இயற்கை நியதிக்கும், சமூக நீதிக்கும் எதிரானது. குழந்தைகள் கல்வி அறிவு பெற்ற வர்களாக இருந்தால் மட்டுமே நாட்டின் எதிர்காலம் சிறப்பாக அமையும் என்பதை கருத்தில்
கொண்டு, மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் அரசு, குழந்தைத் தொழிலாளர் முறை
என்ற கொடுமையிலிருந்து அவர்களை விடுவித்து, அவர்களுக்கு இனிமையான குழந்தைப்
பருவத்தினையும், முறையான கல்வியினையும் வழங்கி வருகிறது.

தமிழ்நாட்டில் குழந்தைத் தொழிலாளர் முறையினை முற்றிலுமாக ஒழித்திடும் வகையில்,
வேலையில் ஈடுபடுத்தப்படும் குழந்தை தொழிலாளர்களை மீட்டெடுத்து, சிறப்புப் பயிற்சி
மையங்களில் அக்குழந்தைகள் கல்வி கற்கவும், அவர்களுக்கு விலையில்லா சீருடைகள், பாடப்
புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், புத்தகப் பைகள், காலணிகள், கல்வி உபகரணங்கள், சத்தான
மதிய உணவு, கட்டணமில்லா பேருந்து பயண அட்டைகள், மிதிவண்டிகள், மடிக்கணினிகள்
வழங்கி வருவதோடு, உயர் கல்வி பயிலும் முன்னாள் குழந்தை தொழிலாளர்களுக்கு அவர்களின்
கல்விக் காலம் முழுமைக்கும் 500 ரூபாய் வீதம் மாதாந்திர உதவித் தொகை வழங்குதல் போன்ற
எண்ணற்ற நலத் திட்டங்களை மாண்புமிகு அம்மாவின் அரசு சீரிய முறையில் செயல்படுத்தி
வருகிறது.

மேலும், 18 வயது நிறைவடையாத வளரிளம் பருவத்தினரை அபாயகரமான பணிகளில்
அமர்த்தப்படுவதை முற்றிலுமாக தடை செடீநுது மத்திய அரசு வெளியிட்ட சட்டத் திருத்தத்தினை
தமிடிநநாடு அரசு தீவிரமாக செயல்படுத்தி, குழந்தைத் தொழிலாளர் முறையினை அகற்றுவதில்
இந்தியாவிலேயே முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு திகழ்ந்து வருகிறது.

‘குழந்தைகளின் வருமானம் நாட்டிற்கு அவமானம்’ என்பதை உணர்ந்து, குழந்தைகளின்
உரிமைகளை மதித்து, குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி, குழந்தைத் தொழிலாளர் இல்லாத
மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்கிட, அரசு மேற்கொள்ளும் சீரிய முயற்சிகளுக்கும்,
திட்டங்களுக்கும் அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு நல்கிடுமாறு அன்புடன் கேட்டுக்
கொள்கிறேன்.

கல்வி குழந்தையின் பிறப்புரிமை!
அதை அவர்களுக்கு கொடுப்பது நமது கடமை!

இவ்வாறு அதில் குறிப்பிட்டு உள்ளார்.