சீனாவில் மசாஜ் நிலையத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி தீயில் சிக்கி 18 பேர் உயிரி ழந்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. மேலும் பலர் பலத்த காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

சீனாவில் ஜியாங் மாகானம் தைவூ நகரில் உள்ள ஒரு கட்டிடத்தில் மின்சாரம் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.   தரைத்தளத்தில் பற்றிய தீயானது மளமளவென அடுக்குமாடி கட்டிடம் முழுவதும் பரவியது.

கட்டிடத்தில் மாடியில் மசாஜ் நிலையம் ஒன்று செயல்பட்டு வந்தது. இதில் பலர் பணியில் இருந்தனர். இந்த தீ விபத்தில் மசாஜ் பார்லரில் இருந்த பலர் பலியானதாக கூறப்படுகிறது.

மேலும் மற்ற தளங்களில் இருந்தவர்கள், பக்கத்துக்கு போர்ஷனில் இருந்தவர்கள் செய்வதறியாது அங்கிருந்தத  ஜன்னல் வழியாக கீழே குதித்தனர். இதில் பலருக்கு காயம் ஏற்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.

தீ விபத்தின்போது  கட்டிடத்தின் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களும் தீயில் எரிந்து நாசமாகின. காற்றின் வேகத்தால் பரவிய தீயின் உக்கிரத்தில் கண்ணாடி ஜன்னல்கள் வெடித்து சிதறின.

இந்த கோர விபத்தில் 10 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர். தீக்காயங்களுடன் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 8 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர் என சீன அரசு தகவல்கள் தெரிவிக்கிறது. மேலும் பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.

தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர்.