கென்யா: சீன கடன் வழங்குநர்கள் முன்தொகையாகத் தந்த பெரும் கடன்களை கென்ய அரசு செலுத்தத் தவறினால், அந்நாடு கொண்டிருக்கும்  இலாபகரமான தனது மொம்பாஸா துறைமுகத்தை சீனாவிடம் இழக்கும் அபாயம் உள்ளது.

நவம்பர் மாதத்தில், ஆபிரிக்கன் ஸ்டாண்ட் தந்த அறிக்கையில் சீனாவிடம் பெற்ற மிகப் பெரிய கடனால்,  கென்யா எவ்வாறு ஆதாரமான தனது சொத்துக்களை இழக்க நேரிடும் என கூறிய சில மாதங்களுக்குப் பிறகு சீனர்கள் அவ்வாறே நடவடிக்கை எடுக்க உள்ளனர்.

கென்யாவுக்கு ஸ்டாண்டர்ட் கேஜ் ரயில்வே (எஸ்ஜிஆர்) மேம்பாட்டுக்காக கடன்கள் வழங்கப்பட்டுள்ளன.

நைரோபியில் உள்ள உள்நாட்டு கொள்கலன் டிப்போவும் ஆபத்தில் உள்ளது , இது துறைமுகத்திலிருந்து புதிய சரக்கு ரயில்களில் சரக்குகளை ஏற்றி அனுப்பும் ஒன்றாகும்.

கையகப்படுத்துதலின் தாக்கங்கள் கடுமையானதாக இருக்கும், இதில் ஆயிரக்கணக்கான துறைமுகத் தொழிலாளர்கள் சீனக் கடன் வழங்குநர்களின் கீழ் வேலை செய்ய நிர்பந்திக்கப்படுவார்கள்.

மேலாண்மை மாற்றங்கள் உடனடியாக துறைமுகக் கைப்பற்றலைப் பின்பற்றும், ஏனெனில் சீனர்கள் இயல்பாகவே தங்கள் நலன்களைப் பாதுகாக்க விரும்புவார்கள்.

மேலும், எஸ்.ஜி.ஆரின் இரண்டு பிரிவுகளை நிர்மாணிப்பதற்காக வழங்கப்பட்ட 50000 பில்லியன் டாலர் கடனுக்காக துறைமுகத்திலிருந்து வருவாய் நேரடியாக சீனாவுக்கு அனுப்பப்படும்.

முன்னோடி

பில்லியன் கணக்கான டாலர்களை கடனாக செலுத்துவதில் அர்ப்பணிப்பைக் காட்டத் தவறியதால், 2017 டிசம்பரில், இலங்கை அரசாங்கம் தனது ஹம்பாந்தோட்டா துறைமுகத்தை 99 வருட குத்தகைக் காலத்திற்கு சீனாவிடம் இழந்தது.

இந்த இடமாற்றம், நியூயார்க் டைம்ஸ் கருத்துப்படி, போட்டி இந்தியாவின் கரையிலிருந்து சில நூறு மைல் தொலைவில் சீனாவின் கட்டுப்பாட்டுக்கு இடம் தந்தது.

இது ஒரு முக்கியமான வணிக மற்றும் இராணுவ நீர்வழிப்பாதையில் கால்பதிக்கும் ஒரு வழிமுறையாகும்.

“இந்த வழக்கு உலகெங்கிலும் செல்வாக்கைப் பெறும் சீனாவின் லட்சியத்தியத்திற்காக கடன்கள் மற்றும் உதவிகளைப் பயன்படுத்துவதற்கான விருப்பத்திற்கும் எடுத்துக்காட்டுகளில் ஒன்றாகும்” என்று  டிசம்பர் 12, 2017 இன் நியூயார்க் டைம்ஸ் கூறுகிறது.

செப்டம்பர் 2018 இல், ஸாம்பியா கடன் திருப்பிச் செலுத்துதல் தொடர்பாக கென்னத் கவுண்டா சர்வதேச விமான நிலையத்தை சீனாவிடம் இழந்தது.

ஸ்டாண்டர்டு கேஜ் ரயில்வே(எஸ்.ஜிஆர்) இழப்புகள்

இது போன்ற ஒரு சூழலில் தான் சீனா துறைமுகத்தை எடுத்துக் கொள்கிறது.

அதன் மூலம் கடன் துன்பத்தால் வருமானம் ஈட்டும் சொத்தை இழக்கும் இன்னொரு நாடான இலங்கையுடன் சேர்ந்து கொள்கிறது.

இது சாத்தியமே. ஏனெனில், சீனர்கள் செயல்படுத்தும் ம் எஸ்.ஜி.ஆர், பெரும்பான்மையாக இழப்பை ஏற்படுத்தக்கூடிய ஒரு முயற்சியாகும்.  இது கடன்களைத் திருப்பி செலுத்தும் அளவுக்குப் போதுமான பணத்தை ஈட்ட முடிவதில்லை.

இதுபோல எஸ்ஜிஆர் அதன் முதல் ஆண்டின் செயல்பாட்டில் சுமார் 10 பில்லியன் டாலர் இழப்பை அறிவித்தது.

கென்யா கடனுக்கான முன் தொகையை வழங்கிய  சீனா எக்ஸிம் வங்கிக்கு பெரிதும் சாதகமாக இருந்த ஒரு இழந்த கடன் ஒப்பந்தத்தின் காரணமாகவே இது நிகழக்கூடும் என்று தணிக்கையாளர் ஜெனரல் எச்சரித்துள்ளார்.

குறிப்பாக, கடன் சேவையிலிருந்து எழும் எந்தவொரு சர்ச்சையும் சீனாவில் மத்தியஸ்தம் செய்யப்படும் ஒப்பந்தத்தில் கென்யா சூழ்நிலையின் பாதகமான பக்கத்தில் இருந்தது.

மொம்பாஸா துறைமுகத்தை உள்ளடக்கிய கென்யா துறைமுக அதிகார சபையின் (கே.பி.ஏ) சொத்துக்கள்,எஸ்.ஜி.ஆர் கடன்களை அடைப்பதற்கு போதுமான பணத்தை உருவாக்கவில்லை என்றால் அதை கையகப்படுத்த முடியும் என கடந்த மாதம் நிறைவு செய்யப்பட்ட ஒரு தணிக்கை சுட்டிக்காட்டுகிறது.

“கென்யா ரயில்வே கார்ப்பரேஷன் (கே.ஆர்.சி) தனது கடமைகளில் தவறிவிட்டால், சீனா எக்ஸிம் வங்கி எஸ்க்ரோ கணக்கு பாதுகாப்பு மீது அதிகாரம் செலுத்தினால், சீனா எக்சிம் வங்கி கே.பி.ஏ-வில் ஒரு அடிப்படை அம்சமாக மாறும்” என்று தணிக்கையில் ஒரு பகுதி கூறுகிறது.

எஸ்க்ரோ கணக்கு என்பது ஒரு ஒப்பந்த ஏற்பாடாகும், இதில் மூன்றாம் தரப்பினர் முதன்மை பரிவர்த்தனை செய்யும் தரப்பினருக்கான பணத்தைப் பெற்று வழங்குகிறார்கள், பரிவர்த்தனை செய்யும் தரப்பினரால் ஒப்புக் கொள்ளப்பட்ட நிபந்தனைகளைப் பொறுத்து வழங்கல் வழங்கப்படுகிறது.

கடன் ஒப்பந்தத்தின்படி, எஸ்.ஜி.ஆரிலிருந்து உருவாக்கப்படும் நிதி எஸ்க்ரோ கணக்கில் டெபாசிட் செய்யப்பட வேண்டும் – இது கே.ஆர்.சி மற்றும் சீனா எக்ஸிம் வங்கி சார்பாக அறியப்படாத மூன்றாம் தரப்பினரால் கட்டுப்படுத்தப்படுகிறது.

தற்போதைய மதிப்பீடுகளின்படி, KPA ஒரு மாதத்திற்கு Sh50 பில்லியன் அல்லது ஆண்டுக்கு Sh600 பில்லியனை ஈட்டுகிறது.

தணிக்கையாளரான எஃப் டி கிமானி தனது அறிக்கையில் மேற்கோள் காட்டி, KPA இன் வெளிப்பாடு சீனத்தால் கட்டப்பட்ட ரயில்வே திட்டத்திற்கு போதுமான சரக்குகளை அளிக்கும் தேவையுடன் இணைக்கப்பட்டுள்ளது.

தேவையான சரக்குகளை வழங்கத் தவறியதால்  குறிப்பிட்ட “சரக்குகளுக்குத் தேவையான குறைந்தபட்ச தொகுதிகளுக்கு” ​​உத்தரவாதம் அளிக்கும் கடன் ஒப்பந்தத்தில் கென்யா ஒரு முக்கியமான பிரிவுக்கு எதிராகச் சென்றுவிட்டது.

கே.பி.ஏ கடன் வாங்குபவராக கடன் ஒப்பந்தத்தில் எவ்வாறு கையெழுத்திட்டது என்பதும் விவரிக்க முடியாதது, நச்சு உட்பிரிவுகளில் ஒன்றில் அதன் சொத்துக்களை  சீனாவின் பிடிக்குத் தருகிறது.

“ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதன் மூலம் கென்யா துறைமுக சொத்துக்களின் மீதான பாதுகாப்பினை அரசாங்கம் தள்ளுபடி செய்ததால், கடன் வழங்குபவரின் அதன் சொத்துக்களுக்கு (கேபிஏ) எந்தவொரு நடவடிக்கையும் (இறையாண்மை) பாதுகாக்கப்படாது” என்று தணிக்கையாளர் எழுதினார்.

கடன்களுக்கான திருப்பிச் செலுத்துவதற்கான ஐந்தாண்டு கால அவகாசம் அடுத்த ஆண்டு நடுப்பகுதியில் முடிவடைகிறது.