லக்னோ:

இந்தியா பலவீனமான நாடு கிடையாது என சீனா புரிந்துக் கொண்டது என்று ராஜ்நாத் சிங் கூறினார்.

உ.பி. மாநிலம் லக்னோவில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்துகெ £ண்டு பேசுகையில், ‘‘ இந்தியாவின் எல்லை இப்போது முற்றிலும் பாதுகாப்பாக உள்ளது. இந்தியா இனியும் பலவீனமாக இருக்காது என்பதை சீனா புரிந்துக் கொண்டுள்ளது. இந்தியாவின் வலிமை உயர்ந்துவிட்டது என்பது சீனாவுக்கு தெரியும்.

மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு பிரதமர் மோடியின் தலைமையில் இந்தியா உலகில் மிகவும் சக்தி வாய்ந்த நாடாகியுள்ளது. இந்தியாவின் பெருமை சர்வதேச அளவில் உயர்ந்துள்ளது’’ என்றார்.

மேலும், அவர் பேசுகையில், ‘‘இந்தியாவிற்குள் பாகிஸ்தான் தொடர்ந்து பயங்கரவாதிகளை ஊடுறுவ செய்து வருகிறது. இந்தியாவை உடைக்க பாகிஸ்தான் முயற்சிக்கிறது. இந்திய பாதுகாப்பு படைகள் தினமும் 2 முதல் 4 பயங்கரவாதிகளை கொல்கிறது’’என்றார்.