லண்டன்: ரூ.51 லட்சம் கோடி கடனை திருப்பி செலுத்தாதைத் தொடர்ந்து,  அனில் அம்பானியின் சொத்துக்களை ஏலம் விட சீன வங்கிகளுக்கு லண்டன் நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டு உள்ளது.

அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமம்,  69 லட்சம் கோடி ரூபாய் கடனை மறுசீரமைக்க சீனாவைச் சேர்ந்த 3 வங்கிகளிடம் 51 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கியிருந்தன. ஆனால்,  கடனை முறையாக திரும்ப கட்டாததால்,  அனில் அம்பானியின் சொத்துக்களை முடக்கக் கோரி சீன வங்கிகள்  லண்டன் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தன.

ஏற்கனவே நடைபெற்ற விசாரணையின்படி, சீனாவைச் சேர்ந்த 1 வங்கிகளுக்கும் சேர வேண்டிய ரூ .7.04 கோடி வட்டி உட்பட ரூ .5,276 கோடி தொகையை அனில் அம்பானி செலுத்த வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், அனில் அம்பானி கடனை செலுத்தாதல், அதன் தொகை தற்போது 5300 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

இந்த நிலையில் அனில்அம்பானி மீதான வழக்கு கடந்த  25ம்தேதி  நடைபெற்றது. அப்போது அனில் அம்பானியிடம்  ஆன்லைன் குறுக்கு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அப்போது,  ஊடகங்கள் கூறுவது போல் தான் ஆடம்பர வாழ்க்கை வாழவில்லை. என்னிடம் தனிப்பட்ட சொத்துக்களும் இல்லை. மேலும் கடன் பட்டு அனைத்து சொத்துகளையும் இழந்து விட்டதாகவும் இந்த சட்ட செலவுகளுக்கு கூட மனைவியின் நகைகளை விற்று, அதன் மூலம் செலவு செய்வதாகவும், தனது செலவுகள் அனைத்தையும் தனது குடும்பத்தினரே பார்த்துக் கொள்வதாகவும் அனில் அம்பானி கூறியதாக செய்திகள் வெளியாகின.

மேலும், தன்னுடைய தாய்க்கு ரூ .500 கோடியும், தனது மகன் அன்மோலுக்கு ரூ .310 கோடியும் கடனாக உள்ளதாக அனில் அம்பானி கூறியதாகவும், தற்போதைய நிலையில்,  ரிலையன்ஸ் கண்டுபிடிப்புகளில் தனது 12 மில்லியன் பங்கு பங்குகள் “பயனற்றவை”யாக உள்ளது என்றும்  குறிப்பிட்டார்.

வங்கிகளின் சார்பில் ஆஜரான வக்கீல் பாங்கிம் தாங்கி க்யூசி, தனது நிலுவைத் தொகையைத் தவிர்ப்பதற்காக அனில் அம்பானி  முயற்சிப்பதாக குற்றம்சாட்டினார்.

விசாரணையைத் தொடர்ந்து,  அனில் அம்பானி அளித்த தகவல்கள் அடிப்படையில் சட்டபூர்வமாக தங்களுக்கு சேர வேண்டிய கடன் தொகையை பெற சீன வங்கிகள் நடவடிக்கை எடுக்கலாம் என இங்கிலாந்து நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. அதைத் தொடர்ந்து உலகம் முழுவதும் உள்ள அனில் அம்பானியின் சொத்துக்களை ஏலம் விட தேவையான நடவடிக்கைகளை 3 சீன வங்கிகளும் எடுத்து வருகின்றன.

இதுதொடர்பாக,  மூன்று சீன வங்கிகளும் (தொழில்துறை மற்றும் வணிக வங்கி, சீனாவின் ஏற்றுமதி-இறக்குமதி வங்கி மற்றும் சீனா மேம்பாட்டு வங்கி) சார்பாக ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.  அதில்,  “அமலாக்க நடவடிக்கை மற்றும் திரு அம்பானிக்கு எதிராக கிடைக்கக்கூடிய அனைத்து தீர்வுகளையும் தொடர விரும்புகின்றன” என்று கூறியுள்ளது.  “வங்கிகள் தங்கள் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், அவர்களுக்குக் கொடுக்க வேண்டிய நிலுவைக் கடன்களை மீட்பதற்கும் கிடைக்கக்கூடிய அனைத்து சட்ட வழிகளையும் தொடர குறுக்கு விசாரணையிலிருந்து வரும் தகவல்களைப் பயன்படுத்தும்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.