சீன பல்கலைக்கழகத்தில் தமிழ் கற்றுகொடுக்கும் பேராசிரியை, உலகின் மூத்த மொழியான செம்மொழியான தமிழை தமிழர்கள் பேணிக்காக்க வேண்டும் என்றும், , தமிழ்நாட்டில் உள்ள வர்கள் தங்களது குழந்தைகளை தமிழ் வழியில் படிக்க வைத்து அடுத்தடுத்த தலைமுறை களுக்கு தமிழ் மொழியை கொண்டுசெல்ல வேண்டும்” அறிவுரை கூறி உள்ளார்.

சமீப காலமாக சீனாவை சேர்ந்த சிலர் தமிழ் மொழியில் அழகாக பேசுவதும், தமிழ் கற்றுக் கொள்ளும் காட்சிகளும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சீனர்களின் தமிழ் உச்சரிப்பு மற்றும் அவர்களின் தமிழ் கலாச்சாரம், தமிழ்நாட்டு மக்கள் மட்டுமின்றி உலக தமிழர்களின் புருவத்தையும்  உயர்த்த வைத்துள்ளது. இதுகுறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.. சீனர்கள் ஏன் தமிழ் கற்கிறார்கள்.., அவர்களுக்கு தமிழ் சொல்லிக்கொடுப்பது யார் போன்ற அரிய தகவல்கள் வெளியாகி உள்ளது…

சீனாவிலுள்ள புகழ்பெற்ற யுனான் மாநிலத்திலுள்ள யுனான் மின்சு பல்கலைக்கழகத்தின் தெற்காசிய மொழிகள் மற்றும் கலாச்சாரம் கற்றுகொடுக்கப்படுகின்றன. குறிப்பாக தமிழ், வங்காளம், நேபாளி, சிங்களம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளுக்கான துறைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த பல்கலைக்கழகத்தில் கடந்த  2017ம் ஆண்டு தமிழ் துறை அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டது.அதையடுத்து கடந்த ஆண்டு முதல் தமிழ்  பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

தமிழ்த்துறை பேராசிரியர் கிகி ஜாங் எனப்படும் நிறைமதி

இதுகுறித்து கூறியுள்ள மின்சு பல்கலைக்கழக தமிழ் துறையின் ஒருங்கிணைப்பாளரும், துணைப் பேராசிரியருமான நிறைமதியிடம் (சீனப் பெயர் கிகி ஜாங்), “நாங்கள் தமிழ் மொழி யில் நான்காண்டுகள் இளங்கலை பட்டப் படிப்பை வழங்கி வருகிறோம். தமிழ் மொழி குறித்த அறிமுகமே இல்லாத ஆறு சீன மாணவர்கள் தற்போது படித்து வருகிறார்கள். அவர்களுக்கு முதலாமாண்டு அடிப்படை படிப்பு, பேச்சு, எழுத்து குறித்தும், அடுத்தடுத்த ஆண்டுகளில் தமிழர்களின் இலக்கியம், கலாசாரம், பண்பாடு உள்ளிட்ட பல்வேறு சிறப்பியல்புகளையும் சொல்லித் தருகிறோம்” என்று தெரிவித்து உள்ளார்.

இந்த பல்கலைக்கழகத்தில் தமிழ் படிப்பிற்கு சீனாவை சேர்ந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். முதற்கட்ட நுழைவுத் தேர்வுக்கு பிறகு தமிழை விருப்பப்பாடமாக தேர்ந்தெடுத்தவர்க ளிடம் அதற்குரிய காரணங்களை கேட்டறிந்துவிட்டு தகுதியான மாணவர்களை தேர்வு செய் வதாக நிறைமதி  கூறுகிறார்.  தமிழை படிக்கும் மாணவர்களையும், என் போன்ற ஆசிரியர்களை யும் ஊக்குவிக்கும் சீன அரசு குறிப்பிடத்தக்க அளவில் உதவித்தொகைளையும் வழங்குகிறது” என்று நிறைமதி கூறுகிறார்.

“தமிழ் மொழிக்கும் சீனாவிற்கும் பல நூற்றாண்டுகளாக நெருங்கிய தொடர்பு உள்ளது. அதுமட்டு மின்றி, அன்று தொட்டு இன்று வரை வர்த்தகத்தில் சிறந்த நண்பர்களாக திகழ்ந்து வருகிறோம். இதை கலை, விளையாட்டு, கல்வி போன்றவற்றிற்கும் விரிவுபடுத்துவதற்கு சீனா விரும்புகிறது.

அதுமட்டுமின்றி, பிராந்தியத்தில் மிகப் பெரிய நாடாக விளங்கும் இந்தியாவை முழுவதுமாக புரிந்துகொள்ள வேண்டுமென்றால், அதற்கு தென்னிந்தியாவை அதுவும் குறிப்பாக தமிழ் நாட்டை புரிந்துகொள்வது அவசியம் என்பதால் நாங்கள் தமிழ் மொழியையும், அதன் கலாசாரம், இலக்கியம், கலைகள் உள்ளிட்டவைகள் குறித்து தெரிந்துகொள்வதற்கு முயற்சித்து வருவதன் ஒருபடியே இது.

தமிழ் மொழியின் சிறப்பியல்புகள், தமிழர்களின் வரலாறு, கலாசாரம், பண்பாடு போன்றவற்றை யெல்லாம் தவிர்த்து தமிழை படிப்பதால் சீனர்களுக்கு பிரகாசமான வேலைவாய்ப்பு உள்ளதாக உறுதிபட கூறுகிறார் நிறைமதி.

எனவே, எங்களது மாணவர்கள் தமிழ் மொழியை மட்டுமின்றி அதன் சிறப்பியல்புகள் குறித்து முழுவதும் தெரிந்து கொள்ளும் விதமாக அவர்களது மூன்றாமாண்டு படிப்பை முழுவதும் தமிழ கத்தில் கற்பதற்கான வாய்ப்புகளை உருவாக்குவதற்கு விரைவில் தமிழ்நாட்டு பல்கலைக் கழங்களுடன் ஆசிரியர்-மாணவர் பரிமாற்ற புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொள்ள உள்ளோம்” என்று விவரிக்கிறார்.

முற்றிலும் தமிழ் மொழியின் அறிமுகமே இல்லாத சீன மாணவர்கள் படிப்பை தொடங்கிய சில மாதங்களிலேயே மொழியை ஆர்வத்துடன் கற்று கொளவ்துடன்,  தங்களது எண்ணங்களை அழகான கையெழுத்தில் தமிழிலேயே எழுதி வருகின்றனர்.

இதுகுறித்து கூறியுள்ள தமிழ் படிக்கும் சீன மாணவர் ஒருவர்,  தமிழ் மொழியில் 247 எழுத்துகள் உள்ளதை கண்டு மிகவும் பயந்துவிட்டேன். ஆனால், தமிழை தொடர்ந்து படித்து, படித்து அதனால் ஈர்க்கப்பட்டு விட்டேன் எனறுமகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். இவர் தனது பெயரை மகிழன் என்று மாற்றி உள்ளார்.

“நான் தமிழ்நாட்டில் சில காலம் வாழ்ந்து அங்குள்ள கலாசாரத்தில் முழுமையாக மூழ்க விரும்புகிறேன். வாழ்நாள் முழுவதும் தமிழ் சார்ந்த பணிகளை மேற்கொள்வதுடன், சீன-இந்திய நட்புக்கு ஒரு பாலமாக மாற வேண்டுமென விரும்புகிறேன்” என்று கூறி உள்ளார் மகிழன்.

இங்கு தமிழ் படிப்பு மட்டுமின்றி தமிழர்களின் கலாச்சாரமான பொங்கல் விழா கொண்டாடுதல், தமிழ் உணவு சாப்பிடுதல், தமிழ் திரைப்படங்களை ரசித்தல் முதலியவற்றின் மூலம் தமிழர் களின் கலாசாரத்தை புரிந்துகொள்வதற்கும், தமிழ் மொழியை மேலும் ஆர்வமாகவும் ஆழமாகவும் கற்றுக்கொள்ளவும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

தமிழ் படிக்கும் சீனஇளம்பெண் கயல்விழி

“தமிழ் மிகவும் அழகாக இருக்கிறது. தமிழ் மொழியை கற்றுக்கொள்வது கடினமாக இருந்தாலும், அதை ஈடுபாட்டுடன் கற்றுக்கொண்டு, தமிழர்களுடன் செம்மையாக உரையாடல் நடத்த விரும்புகிறேன்” என்று கூறுகிறார் கயல்விழி என்னும் சீன மாணவி.

“நான் பட்டம் பெற்ற பிறகு தமிழ்நாட்டிற்கு சென்று மேலதிக கற்றல்களையும், ஆராய்ச்சிகளை யும் மேற்கொண்டு, ஒரு தேர்ந்த தமிழ் ஆசிரியராக விரும்புகிறேன்” என்று கயல்விழி கூறுகிறார்.

தொடர்ந்து பேசிய பேராசிரியை நிறைமதி,  எங்களிடம் நான்காண்டு பட்டப்படிப்பை முடிக்கும் மாணவர்களுக்கு ஏராளமான வேலைவாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன. உதாரணமாக, சென்னையில் பல்வேறு சீன நிறுவனங்களின் கிளைகளும், தொழிற்சாலைகளும், துணை நிறுவனங்களும் செயல்பட்டு வருகின்றன. அவற்றின் உயரதிகாரிகளாக உள்ள சீனர்களுக்கு மாண்டரின், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளே தெரிந்துள்ளதால் மற்ற பணியாளர்களுடன் இயல்பாக உரையாடுவது கடினமாக உள்ளது.

இந்நிலையில், மாண்டரின், ஆங்கிலம் மட்டுமின்றி தமிழும் தெரிந்த சீனர் ஒருவர் இருந்தால் எப்படி இருக்கும் என்ற இடைவெளியை பூர்த்தி செய்யும் வகையில் எங்களது முயற்சி இருக்கும். அதுமட்டுமின்றி, பொதுவாகவே தமிழ் திரைப்படங்களை ஆர்வத்துடன் பார்க்கும் சீனர்களுக்கு பெருந்தடையாக இருந்துவரும் மொழிபெயர்ப்பை மேற்கொள்வதிலும் பணிவாய்ப்புகள் உள்ளன.

தமிழ் இலக்கியங்களை ஆழ்ந்து படித்து, அதில் ஆராய்ச்சி செய்வதற்கும், எதிர்கால சீனர்களுக்கு தமிழ் மொழியை கொண்டுசெல்லும் ஆசிரியராகவும் பணிபுரிவதற்கு வாய்ப்புள்ளது” என்று நிறைமதி மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறார்.

தமிழ்நாட்டில் தமிழ் படிப்பதை அவமானமாக கருதி வரும் நிலையில் வெளிநாடுகளில் தமிழும், தமிழ் கலாச்சாரமும் வெகு வேகமாக முன்னேறி வருகிறது.  சீனா உள்பட பல வெளிநாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்கள் தமிழையும், தமிழ் கலாச்சாரத்தையும் தங்களது நாட்டு மக்களுக்கு போதித்து வருகின்றன. பல நாடுகளில் தமிழ் இருக்கை அமைக்கப்பட்டு தமிழ் வளர்க்கப்பட்டு வருகிறது.

ஆனால், தமிழ்நாட்டில் தமிழின் நிலை கேள்விக்குறியாகவே உள்ளது. தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் ஆங்கில மோகத்தின் காரணமாக தமிழ் மெல்ல மெல்ல சாகும் நிலைக்கு தள்ளப்பட்டு வருகிறது.

ஆனால், தற்போது தமிழகத்தில் தமிழின் நிலை குறித்து அறிந்துள்ள சீன தமிழ் பேராசிரியை நிறைமதி,   “தமிழர்கள் தங்களது தாய்மொழியின் மீது அதிக பாசம் கொண்டவர்கள் என்பதை நான் நன்கறிவேன். தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் ஆங்கில மொழி மீதான மோகத்துக்கு உலகமயமாக்கலே மிக முக்கிய காரணம். இதுபோன்ற தடைக்கற்களை சீன மொழியும் சந்தித்தது. தற்போது  மீண்டெழுந்து வருகிறது. இருந்தாலும், உலகின் மூத்த மொழியான செம்மொழியான தமிழை தமிழர்கள் பேணிக்காக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

தமிழின் அறிமுகமே இல்லாத சீனர்களே தமிழை கற்க முன்வரும் நிலையில், தமிழ்நாட்டில் உள்ளவர்கள் தங்களது குழந்தைகளை தமிழ் வழியில் படிக்க வைத்து அடுத்தடுத்த தலைமுறை களுக்கு தமிழ் மொழியை கொண்டுசெல்ல வேண்டும்”  அதுவே எனது ஆசை என்றும் நிறைமதி கூறி உள்ளார்.

Credit:  BBC