சமூக வலைத்தளங்களில் சர்ச்சை நாயகியாக வலம் வந்தவர் பின்னணி பாடகி சின்மயி. கவிஞர் வைரமுத்து மீது பாலியல் புகார் தெரிவித்ததிலிருந்து சின்மயி டப்பிங் யூனியனிலிருந்து நீக்கப்பட்டார். இதனால் படவாய்ப்புகள் இல்லாமல் இருந்தார் சின்மயி.

டப்பிங் யூனியன் தலைவரான ராதாரவியின் இந்த நடவடிக்கையை அடுத்து சின்மயி நீதிமன்றம் சென்று மீண்டும் டப்பிங் யூனியனில் சமீபத்தில் இணைந்தார். இந்தப் பிரச்சினை காரணமாக கடந்த ஒரு வருடமாக எந்த தமிழ் படத்திற்கும் அவர் டப்பிங் பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சின்மயி சிவகார்த்தி நடிக்கும் ஹீரோ படத்தில் கல்யாணி ப்ரியதர்ஷனுக்கு டப்பிங் கொடுத்துள்ளார். இதுகுறித்து சின்மயி தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது, ‘டப்பிங் யூனியனில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக ஒரு வருடத்துக்கு மேல் தான் தமிழ் படங்களுக்கு டப்பிங் செய்யாமல் இருந்ததாகவும், தற்போது தனக்கு வாய்ப்பு அளித்த மித்ரன் மற்றும் தயாரிப்பாளருக்கு நன்றி கூறுவதாகவும் அவர் தெரிவித்தார் மித்ரன் மற்றும் தயாரிப்பாளர் தனக்கு உண்மையான ஹீரோவாக தெரிவதாகவும் அவர் தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்