கள்ளக்குறிச்சி :

 

முன் விரோதம் காரணமாக அதிகார துஷ்ப்ரயோகம் ?

ள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் தாலுக்கா மூங்கில் பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் பெரியசாமி மகன் சக்திவேல். இவர் நேற்று இரவு குடும்பத்துடன் வீட்டில் இருந்துள்ளார், அப்போது நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்த போது இரவு சுமார் 11 மணி அளவில் அந்த கிராமத்திலுள்ள மின்மாற்றியில் போலீசார் மின்தடை ஏற்படுத்தி சின்னசேலம் இன்ஸ்பெக்டர் சுதாகர் மற்றும் மூன்று போலீஸ்காரர்கள் போலீஸ் உடையில் செல்லாமல் மப்டியில் ( டீ சர்ட்) சக்திவேல் வீட்டுக்கு சென்றுள்ளனர்.

இன்ஸ்பெக்டர் சுதாகர் மற்றும் போலீசார் சக்திவேலின் வீட்டின் உள்ளே எந்தவித காரணமும் கூறாமல் அத்துமீறி நுழைந்த தோடல்லாமல், இன்ஸ்பெக்டர் சுதாகர், சக்திவேலை சட்டையைப் பிடித்துக்கொண்டு சரமாரியாக கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்டுள்ளார்.

“எதற்காக என்னை அடிக்கிறீர்கள்” என்று காரணம் தெரியாமல் அடி வாங்கிய சக்திவேல் கதறி உள்ளார், சத்தம் கேட்டு ஓடிவந்த அங்கிருந்த சக்திவேலின் நண்பர்கள் இந்த சம்பவத்தை வீடியோவில் பதிவு செய்துள்ளனர்.

வெகுநேரமாக இருட்டில் கொடூரமாக தாக்கி காரில் ஏற்றியபோது சக்திவேலின் தந்தை மற்றும் தாய் ஆகிய இருவரும் இன்ஸ்பெக்டர் காலில் விழுந்து கதறி அழுது என் மகனை கொன்றுவிடாதீர்கள் எதற்காக என் மகனை அடித்து இழுத்துச் செல்கிறீர்கள் தயவு செய்து விட்டுவிடுங்கள் என கெஞ்சி கதறியும் எதுவும் கூறாமல் காவல் நிலையம் அழைத்துச் சென்றுள்ளனர்.

இது சம்பந்தமாக இன்ஸ்பெக்டர் சுதாகரை தொடர்புக்குள்ள முயற்சித்து முடியாததால், போலீசாரிடம் விசாரித்தபோது அவர்கள் கூறியதாவது, சக்திவேல் இன்ஸ்பெக்டர் சுதாகர் குறித்து பேஸ்புக்கில் ஒரு பதிவு, தன்னைப்பற்றி பேஸ்புக்கில் பதிவு செய்த விரக்தியில் இன்ஸ்பெக்டர் சுதாகர், சக்திவேலை தாக்கி அழைத்து வந்ததாக கூறப்படுகிறது.

ஊரடங்கு உத்தரவை மீறி ஊர் சுற்றும் வாலிபர்களை அடிக்காதீர்கள் அவமானம் படுத்தாதீர்கள் என காவல்துறை டிஜிபி அவர்கள் காவல்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி எச்சரிக்கை விடுத்து வரும் நிலையில், வீட்டிலிருந்த ஒரு வாலிபரை போலீஸார் மஃப்டி உடையில் சென்று கிராமத்தில் மின் தடை ஏற்படுத்தி கொலைவெறி தாக்குதல் நடத்திய சம்பவம் சின்னசேலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

போலீசார் சக்திவேலை ஏற்றிக்கொண்டு கிராமத்தை விட்டு சென்றதும் சற்று நேரத்தில் மின் தடை நீங்கியதாக அந்தக் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர் மின்மாற்றி பகுதியில் இரண்டு போலீசார்கள் நின்றுகொண்டிருந்ததை பார்த்ததாக அவ்வழியாக சென்ற மக்கள் கூறுகின்றனர்.

தன்னை பற்றி சமூக வலைத்தளங்களில் பதிவு செய்ததற்காக, வழுக்கு பதிந்து முறையான வழியில் விசாரணை செய்யாமல், முன்விரோதம் காரணமாக தன் அதிகாரத்தை துஷ்ப்ரயோகம் செய்து அத்துமீறி நுழைந்து இரவு நேரத்தில் ஒரு வாலிபரை அடித்து அவரது குடும்ப உறுப்பினரை தரக்குறைவாக பேசும் இன்ஸ்பெக்டர் சுதாகர் மீது தமிழக காவல் துறை தலைவர் தகுந்த நடவடிக்கையெடுக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

[youtube https://www.youtube.com/watch?v=CkKnlFAl_5g]