இந்தியா கோவிட் -19 தடுப்பூசியை பெற்று வரும் நிலையில், நடிகை ராதிகா சரத்குமார் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசையை போட்டுக் கொண்டார். தனது சமூக வலைதள பக்கத்தில் இது குறித்த அறிவிப்பையும் அவர் வெளியிட்டிருந்தார்.

தடுப்பூசி போட்டுக் கொள்ளும் ஒரு படத்தைப் பகிர்ந்த ராதிகா சரத்குமார், ”தடுப்பூசி போட்டுக் கொண்டேன். தயவுசெய்து உங்களையும் உங்கள் அன்புக்குரியவர்களையும் பாதுகாத்துக் கொள்ளுங்கள். தடுப்பூசி போடுங்கள். அனைத்து பாதுகாப்பு விதிமுறைகளையும் பின்பற்றுங்கள்” எனத் தெரிவித்திருந்தார்.

அதேபோல் நடிகர் கமல்ஹாசனும் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் கொரோனாவைரஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டேன். தன் மேல் மாத்திரமல்ல, பிறர் மேல் அக்கறையுள்ளவர்களும் போட்டுக்கொள்ள வேண்டும். உடல் நோய்த் தடுப்பூசி உடனடியாக, ஊழல் நோய்த் தடுப்பூசி அடுத்த மாதம். தயாராகிவிடுங்கள் என பதிவிட்டுள்ளார் .