மதுரை:

ரசு ஊழியர்கள் 2வது திருமணம் செய்தால் அவர்கள்மீது. குற்றவியல் வழக்கு பதிவு செய்து, துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர்நீதி மன்றம் மதுரை கிளை அதிரடி உத்தரவிட்டு உள்ளது.

மதுரையை சேர்ந்த தேன்மொழி, தனது கணவரின் ஓய்வூதியம் தொடர்பாக வழக்கு பதிவு செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள்,  அரசு ஊழியர்கள்  இரண்டாவது திருமணம் செய்வது நன்னடத்தை ஆகாது. இது சட்டப்படி குற்றம் என்று கூறினார்.

மேலும், அரசு ஊழியர்கள் மீது  2வது திருமணம் செய்ததாக புகார்கள் எழுந்தால் அவர்கள் மீது துறை நீதியான நடவடிக்கையுடன் குற்ற வழக்கும் பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள்,  ஒருவர் ஓய்வு பெறும்போது, ஓய்வூதியத்திற்காக  மனைவி பெயரை பரிந்துரைக்கும் ஆவணங்களை முறையாக அரசு  பரிசீலிக்க வேண்டும் எனவும், இதுதொடர்பாக வழிகாடுதல் களை பிறப்பிக்க வேண்டும் என தமிழக நிர்வாகத்துறை செயலருக்கு உத்தரவிட்டது.