புதுடெல்லி: இம்மாதம் 31ம் தேதி நடைபெறவிருந்த சிவில் சர்வீஸ் முதன்மை தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
தேர்வு எப்போது நடத்தப்படும் என்பது குறித்து மே 20ம் தேதி முடிவு செய்யப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
2020-ம் ஆண்டிற்கான சிவில் சர்வீஸ் முதன்மைத் தேர்வு மே மாதம் 31ம் தேதி நடத்தப்பட திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், மார்ச் 22ம் தேதியிலிருந்து நாடெங்கும் ஊரடங்கு அமலில் உள்ளது.
இந்த ஊரடங்கு மே 17 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதற்கு மேலும் நீட்டிக்கப்படும் வாய்ப்புகள் உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், மார்ச் 31ம் தேதி நடக்கவிருந்த தேர்வு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
அந்தத் தேர்வு எப்போது நடைபெறும் என்பது மே 20ம் தேதி அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.