டெல்லி:  முல்லை பெரியாறு அணை வழக்கில் இருந்து விலகுவதாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே கூறி உள்ளார்.

இது குறித்து அவர் கூறி இருப்பதாவது: அணை மேற்பார்வை குழுவால் ஏற்படுத்தப்பட்ட  துணைக்குழுவை கலைக்க கோரிய மனு மீதான விசாரணைகளில் இருந்து விலகுகிறேன். எனது சகோதரர் இந்த வழக்கில் வழக்கறிஞராக ஆஜராகி உள்ளார்.

ஆகவே இந்த வழக்கில் இருந்து நான் விலகிக் கொள்கிறேன். அணை மேற்பார்வை குழுவால் ஏற்படுத்தப்பட்ட  துணைக்குழுவை கலைக்க கோரிய  மனுவை நீதிபதி நாரிமன் தலைமையிலான அமர்வு விசாரிக்கும் என்றும் நீதிபதி எஸ்.ஏ பாப்டே தெரிவித்துள்ளார்.