டில்லி:

டந்த மாதம் நடைபெற்று முடிந்த ஐபிஎல் போட்டியின்போது சிஎஸ்கே அணி  வெற்றி பெற்றதற்காக, கேப்டன் தோனி, ராஞ்சியில் உள்ள தியோரி கோவிலில்  காணிக்கை செலுத்தினார்.

கடந்த ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற்ற ஐபிஎல் 11-வது சீசன் போட்டிகளில்,  இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் களமிறங்கிய  சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபாரமாக விளையாடி சாம்பியன் பட்டத்தை வென்றது.

இந்த வெற்றி கிடைத்ததற்காக, தனக்கு பிடித்தமானதும், நம்பிக்கைக்குரியதுமான  ராஞ்சியில் உள்ள தியோரி கோவிலுக்கு சென்று வணங்கி காணிக்கை செலுத்தினார்.

இன்று காலை திடீரென  ஜார்க்கண்ட் மாநிலத்தின் தலைநகர் ராஞ்சியில் அமைந்துள்ளது தியோரி கோவிலுக்கு வந்த தோனி,  .அங்குள்ள துர்க்கை அம்மனை வழிபட்ட அவர், தேங்காய் உடைத்து காணிக்கை செலுத்தினார். வெற்றி பெற்றதற்காக துர்காகதேவிக்கு நன்றியையும் செலுத்தினார். இங்குள்ள துர்கா மாதா மிகவும் சக்தி வாய்ந்த தெய்வம் என்று கூறப்படுகிறது.

அதன் பின்னர், சாமி கும்பிட்டு வந்ததும், அங்கு காத்திருந்த தனது ரசிகர்களுடன் செல்பி எடுத்து விட்டு அங்கிருந்து சென்றார்.