டெல்லி: கொரோனா வைரஸ் காரணமாக இந்த ஆண்டுக்கான Common Law Admission Test (CLAT) 2020  தேர்வு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இந்த தேர்வு காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தேசிய சட்ட பல்கலைக் கழகங்களின் கூட்டமைப்பு அறிக்கை ஒன்றில் அறிவித்துள்ளது. CLAT 2020 தேர்வை மே 10-ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

வரும் 7ம் தேதி நாடு முழுவதும் உள்ள தேர்வு மையங்களில் கணினி அடிப்படையில் ஆன்லைன் மூலம் தேர்வு  நடத்த தேசிய சட்ட பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பு முடிவு செய்திருந்தது.

ஆனால் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, அனைத்து மாணவர்களும் தேர்வை பாதுகாப்பாக எழுத முடியுமா என்ற கேள்வி எழுந்து வந்தது. இதையடுத்து, தேசிய சட்ட பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பு ஆலோசனை நடத்தியது.

முடிவில், பல காரணங்களை கருத்தில் கொண்டு,  Common Law Admission Test (CLAT) 2020 தேர்வு செப்.28ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுவதாக செய்திக் குறிப்பு ஒன்றில் தேசிய சட்ட பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பு முடிவு அறிவித்து உள்ளது.