“பாகுபலி” படத்தின் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கும் ‘RRR’ (ரவுத்ரம், ரணம், ருத்ரம்) தெலுங்கு படம், இந்திய அளவில் பெரும் எதிர் பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்து போராடிய சீதாராம் ராஜு மற்றும் குமரன் பீம் ஆகிய இரு போராளிகளை பற்றிய இந்த வரலாற்று படத்தில் ராம் சரணும், ஜுனியர் என்.டி.ஆரும் கதாநாயகன்களாக நடிக்கிறார்கள்.

அலியா பட், அஜய் தேவ்கான் உள்ளிட்டோர் நடிக்கும் இந்த படத்தின் கிளைமாக்ஸ் படப்பிடிப்பு இப்போது ஆரம்பமாகி உள்ளது.

“கிளைமாக்ஸ் ஸ்டார்ட்! ராமராஜும், பீமும் தங்கள் இலக்கை அடைய கை கோர்த்து விட்டார்கள்” என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ராஜமவுலி, இரண்டு கைகள் கை கோர்த்து நிற்பது போன்ற புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.

400 கோடி ரூபாய் செலவில் ‘பான் இந்தியா’ சினிமாவாக “ஆர்.ஆர்.ஆர்.” உருவாகிறது.

தசாரா அல்லது அடுத்த பொங்கல் பண்டிகை அன்று தான் இந்த படம் ரிலீஸ் ஆகும்.

– பா. பாரதி