புதுடெல்லி:

இங்கிலாந்தில் நடைபெற இருக்கும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை காண இந்தியாவிலிருந்து 80 ஆயிரம் பேர் பயணம் மேற்கொள்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இது குறித்து பிரிட்டிஷ் தூதரக செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறும்போது, உலக அளவில் எத்துனை பேர் வருவார்கள் என்று தெரியவில்லை. ஆனால் இந்தியாவிலிருந்து அதிக அளவில் ரசிகர்கள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு இங்கிலாந்துக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கின்றோம்.

தோராயமாக இந்தியாவிலிருந்து 80 ஆயிரம் பேர் வருவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். ஏற்கெனவே இங்கிலாந்தில் நடந்த போட்டிகளை காண இந்தியாவிலிருந்து வந்தவர்களின் அடிப்படையில் இந்த எண்ணிக்கையை எதிர்பார்க்கிறோம்.

கடந்த பிப்ரவரி மாதத்திலிருந்து இங்கிலாந்தில் விசா கேட்டு விண்ணப்பிக்க ஆரம்பித்துள்ளனர்.
வழக்கமாக கோடைக் காலத்தில் சுற்றுலா பயணிகள் அதிகம் வருவர். இம்முறை உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடப்பதால், எண்ணிக்கை அதிகமாகும்.

இந்தியாவிலிருந்து தினமும் 3,500 விண்ணப்பங்கள் பெற்றிருக்கிறோம் என்றனர்.