பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மும்பையில் அவரது இல்லத்தில் கடந்த ஜூன் மாதம் 14-ம் தேதி அன்று தற்கொலை செய்து கொண்டார்.
சுஷாந்தின் தற்கொலை தொடர்பாக சுஷாந்தின் நண்பர்கள், ஊழியர்கள் பலரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தற்கொலை செய்துகொண்ட போது சுஷாந்த் அணிந்திருந்த ஆடைகளை மும்பை போலீஸார் ‘இழுவிசை’ பரிசோதனைக்காக பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
சுஷாந்த்தின் எடை 80 கிலோ. அவர் அணிந்திருந்த ஆடை அவரது எடையை தாங்குகிறதா என்பதை கண்டறிய அவரது ஆடைகள் பிரேத பரிசோதனை கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இறுதி பிரேத பரிசோதனை கிடைக்க இன்னும் மூன்று நாட்கள் ஆகும்.
இதனை தவிர உள்ளுறுப்பு சோதனையம் செய்யப்பட்டுள்ளது இதன் மூலம் அவரது உடம்பில் போதைப்பொருட்கள் அல்லது விஷப்பொருட்கள் செலுத்தப்பட்டிருந்தால் அதையும் கண்டுபிடித்து விடலாம் என்று தெரிவித்துள்ளனர்.
சுஷாந்தின் தற்கொலை உண்மையிலேயே தற்கொலை தானா இல்லை இதற்கு பின் ஏதேனும் மர்மம் உள்ளதா என்பது இன்னும் சில நாட்களில் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.