பார்சிலோன்: மான்செஸ்டர் சிட்டி மற்றும் ஆர்சினல் அணிகளுக்கு இடையிலான கால்பந்து போட்டியை, பிரீமியர் லீக் ஒத்திவைத்துள்ளது.

நாட்டிங்ஹாம் ஃபாரஸ்ட் அன்ட் ஒலிம்பியாகோஸ் உரிமையாளருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டதையடுத்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அவருக்கு தற்போது 52 வயது. அவர், தனது நேரத்தை நாட்டிங்ஹாம் மற்றும் கிரீஸ் ஆகிய இடங்களில், தனது அணியின் கால்பந்தாட்டத்தை ரசித்து செலவிட்டு வந்தார். அவரின் அணி, யுரோப்பா லீக் போட்டியில் ஆடி வந்தது.

ஆனால், வடக்கு லண்டனில் நடைபெற்ற கால்ப்பந்தாட்டப் போட்டியை ரசித்து திரும்பிய 12 நாட்கள் கழித்து, அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது சோதனையின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

எனவே, மான்செஸ்டர் சிட்டி மற்றும் ஆர்சினல் அணிகளுக்கு இடையிலான கால்பந்து போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.