சென்னை,

மிழகத்தில் ஏற்பட்டுள்ள பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் நாளை காலை தலைமை செயலகம் வரவேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்து உள்ளார்.

அதிமுகவில் ஓபிஎஸ், இபிஎஸ் அணிகளுக்கு இடையேயானா பிளவு சமீபத்தில் தீர்ந்து ஒரே அணியாக செயல்பட்டு வருகிறது. இதன் காரணமாக டிடிவி தினகரன் ஓரங்கட்டப்பட்டார்.

இந்நிலையில், டிடிவி தினகரனுக்கு ஆதரவாக 19 எம்எல்ஏக்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அவர்கள் அனைவரும் கவர்னரை சந்தித்து, எடப்பாடியை முதல்வர் பதவியில் இருந்து மாற்ற வேண்டும் என கவர்னகுக்கு கடிதம் கொடுத்தனர். அதைத் தொடர்ந்து  அவர்கள் அனைவரையும், புதுச்சேரியில் உள்ள சொகுசு விடுதிக்கு அழைத்துச்செல்லப்பட்டு,  பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டு, தினகரன் ஆதரவாளர்களால்  கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், திமுக உள்பட எதிர்க்கட்சியினர் கவர்னரை சந்தித்து, எடப்பாடி தலைமையிலான அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

ஆனால், அவர்களது கோரிக்கையை குறித்து சட்டப்படி முடிவு எடுக்க முடியாது என்று கவர்னர் கைவிரித்து விட்டார்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் நாளை தலைமைச் செயலகம் வரவேண்டும் முதல்வர்  எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.

முதல்வரின் இந்த அவசர அறிவிப்பு தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.