புதுச்சேரி:
புதுச்சேரி சட்டமன்றத்தில் முதல்வர் நாராயணசாமி இன்று  2020-21-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.  பட்ஜெட் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து, எதிர்க்கட்சிகளான  அதிமுக, என்.ஆர்.காங்., பா.ஜ.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்

புதுச்சேரியில் இன்று முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், இன்றைய சட்டமன்ற நிகழ்ச்சியில் உரையாற்ற  மாநில கவர்னர் கிரண்பேடி கலந்துகொள்ள மறுத்துள்ளதால், அவருக்காக ஒத்தி வைக்கப்பட்ட   புதுச்சேரி சட்டமன்ற பட்ஜெட் தொடர் பகல் 12 மணிக்கு மீண்டும் தொடங்கியது.
அதைத்தொடர்ந்து,  பகல் 12.05  மணிக்கு மாநில பட்ஜெட்டை முதலமைச்சர் நாராயணசாமி தாக்கல் செய்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகளான  அதிமுக, என்.ஆர்.காங்., பா.ஜ.க. உறுப்பினர்கள் அவையில் இருந்து  வெளிநடப்பு செய்தனர்