சென்னை

ரசின் முக்கிய அதிகாரிகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.

நேற்று முதன் முறையாகப் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1515 என்னும் புதிய உச்சத்தை அடைந்தது.

இதில் பல அரசுத்துறை அதிகாரிகளும் பாதிக்கபட்டுள்ளனர்.

அவ்வகையில் தமிழக முதல்வர் அலுவலகத்தில் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

இதையடுத்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது முகாம் அலுவலகத்தில் இருந்து பணி புரிந்து வருகிறார்.

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை நடத்தப் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ள ஒரு இணை இயக்குநர் கொரோனாவால் பாதிக்கபட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

அத்துடன் மேலும் ஒரு உதவி இயக்குநரும் பாதிக்கபட்டுள்ள்ளார்.