சென்னை:

159 கோடி ரூபாய் மதிப்பில் 500 புதிய பேருந்துகள் தமிழக அரசு சார்பில் வாங்கப்பட்டு உள்ளன. அதன் சேவையை இன்று முதல்வர்  எடப்பாடி தொடங்கி வைத்தார்

தமிழக அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில், கடந்த இரண்டரை ஆண்டுகளில் 1001 கோடி ரூபாய் செலவில் 3381 புதிய பேருந்துகள் சேவை தொடங்கி வைக்கப்பட்டு இருப்பதாகவும், மொத்தம் 1500 கோடி ரூபாய் செலவில் 5000 புதிய பேருந்துகளை வாங்கப்படும் என சமீபத்தில் தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டது.

இந்த நிலையில் இன்று 500 புதிய பேருந்துகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்து தொடங்கிவைத்தார்.

இதில்,  சென்னை மாநகர போக்குவரத்திற்கு 100 பேருந்துகள், அரசு விரைவு போக்குவரத்து கழகத்திற்கு 150 பேருந்துகள், நெல்லை, கோவை, சேலம், மதுரை, கும்பகோணம், விழுப்புரம் ஆகிய 6 கோட்டங்களுக்கு 250 புதிய பேருந்துகள் என மொத்தம் 500 பேருந்துகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன.

இதேபோல, கடந்த உலக முதலீட்டாளர் மாநாட்டின் போது ஒப்பந்தம் போட்டதன் அடிப்படையில் 16 நிறுவனங்களுக்கான அடிக்கற்களையும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நட்டு வைத்தார்.

மேலும் மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து 7 கோடி ரூபாய் செலவில் 137 வகையான உபகரணங்களை தமிழ்நாடு பேரிடர் மீட்பு படைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.