மதுரை:

கூட்டுறவு சங்க தேர்தலில் தற்போதைய நிலையே தொடர மதுரை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது.

திமுக எம்எல்ஏ சங்கரபாண்டியன் தொடர்ந்த வழக்கில், கூட்டுறவு சங்க 3, 4 ம் கட்டம் உள்ள தேர்தலில் தற்போதைய நிலையை தொடர உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.

மேலும், கூட்டுறவு தேர்தல் தொடர்பான அனைத்து விவரங்களையும் தாக்கல் செய்யவும் தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் கூட்டுறவு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முறைகேடு புகார் காரணமாக 21 கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தலை ரத்து செய்து தேர்தல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், கூட்டுறவு சங்க தேர்தலில் முறைகேடு நடப்பதாக 31 சங்கங்கள் சார்பில் சென்னை உயர்நீதி மன்றத்திலும் வழக்குகளும் தொடரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.