விமானியின் உடலைப் பார்த்து ‘’யார் இவர்?’ எனக் கேட்ட மனைவி.

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நிகழ்ந்த விமான விபத்தில் உயிர் இழந்தவர்களில் ,அந்த விமானத்தைச் செலுத்தி வந்த துணை விமானி அகிலேஷ் குமாரும் ஒருவர்.

பிரேத பரிசோதனைக்குப் பிறகு அகிலேஷ் உடல், கொச்சியில் இருந்து விமானம் மூலம் டெல்லி கொண்டு செல்லப்பட்டது.

டெல்லி விமான நிலையத்தில் திரண்டிருந்த சுமார் 200 விமானிகள் அகிலேஷ் குமார் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் சாலை மார்க்கமாக அவர் உடல் சொந்த ஊரான உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவுக்கு கொண்டு செல்லப்பட்டது.

அகிலேஷ் மனைவி மேகா இப்போது நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறார்.

முதலில் அவரிடம் அகிலேஷ் மரணம் குறித்து உறவினர்கள் எந்த தகவலும் கூறவில்லை.

அகிலேஷ் உடல், அவரது வீட்டுக்குக் கொண்டு செல்லப்படுவதற்குச் சிறிது நேரம் முன்பாக, இந்த சோகச்செய்தியை மேகாவிடம் கூறியுள்ளனர்.

இதனால் பிரமை பிடித்தவர் போல் காணப்பட்ட மேகா, கணவர் சடலத்தைப் பார்த்ததும்’’ யார் இவர்?’’ எனக் கேட்டுக் கதறி இருக்கிறார்.

‘இவர் அகிலேஷ் இல்லை.  அகிலேஷ் இல்லை ‘’என்று பலமுறை தேம்பித் தேம்பி அழுதவரை, சொந்தங்களால் சமாதானப்படுத்த இயலவில்லை.

-பா.பாரதி.