கோவை: கோவை மதுக்கரை காவல் நிலையத்தில் 2 சிறப்பு உதவி ஆய்வாளர்கள் உட்பட 7 போலீசாருக்கு கொரொனா தொற்று உறுதியாகி உள்ளது.
கோவை மாவட்டத்தில் கொரொனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆட்சியர் ராசாமணிக்கு இன்று கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது.
இந் நிலையில், மதுக்கரை காவல் நிலையத்தில் பணியாற்றும் 2 சிறப்பு உதவி ஆய்வாளர்கள் உட்பட 7  காவலர்களுக்கு, கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டது. பாதிக்கப்பட்டவர்கள் கோவை இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காவல் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டு, அருகில் உள்ள திருமண மண்டபத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. போலீசாரின் குடும்பத்தினர், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்படும் என்று சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
கோவை மாவட்டத்தில் ஏற்கனவே துடியலூர், போத்தனூர், சூலூர் ஆகிய காவல் நிலையங்கள் கொரோனாவால் மூடப்பட்டன. இப்போது 4வது காவல் நிலையமாக மதுக்கரை காவல் நிலையமும் மூடப்பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது.