டெல்லி:
கோவையில் பெரியார் சிலை மீது காவி  பெயின்ட் வீசப்பட்ட சம்பவத்துக்கு, காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி கண்டனம் தெரிவித்து, தமிழில் டிவிட் பதிவிட்டுள்ளார்.

கோவை அருகே சுந்தராபுரத்தில் பெரியார் சிலை மீது காவி சாயம் பூசப்பட்ட விவகாரம் தமிழகத் தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ள நிலை யில்,  ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளார். பாரத் சேனா அமைப்பைச் சேர்ந்த அருண் கிருஷ்ணன் என்பவர் போத்தனூர் காவல்நிலையித்தில் சரணடைந்தார்.
இதுகுறித்து முன்னாள் காங்கிரஸ் தலைவரும், தற்போதைய எம்.பி.யுமான ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்து தெரிவித்து  தமிழில் டிவீட் பதிவிட்டுள்ளார்.
அதில், “எவ்வளவு தீவிரமான வெறுப்பும் ஒரு மகத்தான தலைவனை களங்கப்படுத்த முடியாது. No amount of hate can ever deface a giant.” என்று பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில் இவ்விவகாரத்தில்
.  இதையடுத்து அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.